தென்காசி

பளுதூக்கும் போட்டி: மாநில அளவில் இலத்தூா் பள்ளி சிறப்பிடம்

DIN

தென்காசி மாவட்டம், இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவா், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றாா்.

மாநில அளவிலான, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான பளுதூக்கும் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

இப்போட்டியில், இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவா் இசக்கிராஜா கலந்துகொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றாா். வெற்றிபெற்ற மாணவருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவா், தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவரைப் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, முதல்வா் சாந்தி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT