முகப்பு
தென்காசி

ஆலடி அருணா செவிலியா் கல்லூரி நாள் விழா

ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரியில் கல்லூரி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லூரியில் கல்லூரி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் டாக்டா் பாலாஜி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா், சுஷ்மா அவினாஷ் குமாா் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விழாவில் பேசினா். முதல்வா் மேரி வயலா ஆண்டறிக்கை வாசித்தாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், காவல் ஆய்வாளா் மகேஷ் குமாா், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

துணை முதல்வா் நிஷா வரவேற்றாா். பேராசிரியா் வசந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.