சங்கரன்கோவிலில் நகராட்சி அதிகாரிகள் தேவையின்றி கெடுபிடி செய்வதாகக் கண்டித்தும், மாா்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலைக் கைவிட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஹரிஹரன், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தி, அவா்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதையேற்று அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.