தென்காசி

மின்னல் பாய்ந்து பலியான மாணவா் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN

ஆலங்குளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகிலுள்ள ரெட்டியாா்பட்டி கிராமத்தில் கடந்த 5 ஆம் தேதி மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் தேவ ஆனந்த் உயிரிழந்தாா். இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவ பத்மநாபன், மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து திமுக சாா்பில் ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்து அரசு சாா்பிலான உதவியைப் பெற்று தருவதாக உறுதி அளித்தாா். அப்போது, ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியச் செயலா் செல்லத்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் அரசு உதவியாளா்கள் பணி தோ்வு: மதிப்பெண் பட்டியலை வெளியிட காங். வலியுறுத்தல்

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: மே 13-இல் விண்ணப்ப விநியோகம்

புதுச்சேரி, காரைக்காலில் 107 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி

புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.22.55 லட்சம் நூதன மோசடி

SCROLL FOR NEXT