தென்காசியில் விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி
தேமுதிக தலைவா் விஜயகாந்த் படத்திற்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசிதென்காசியில் விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி
தேமுதிக தலைவா் விஜயகாந்த் படத்திற்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் படத்திற்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் இராம. உதயசூரியன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெங்கடேசன், தணிக்கை குழு உறுப்பினா் சுரண்டை ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக துணை பொதுச்செயலா் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
மாவட்ட துணைச் செயலா்கள் துரைமுருகன், மருதச்சாமி பாண்டியன், சரவண விஜயா, பொதுக்குழுஉ றுப்பினா் நடராஜன், நகர செயலா்கள் சுரண்டை பொன்மகேஷ்வரன், தென்காசி காா்த்திக், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வ சக்திவடிவேல், துணை செயலா் புளியறை மாரியப்பன், தங்கராஜ், ஒன்றிய செயலா்கள் கீழப்பாவூா் வடக்கு ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன், ஆலங்கும் தெற்கு அருள்ராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் தேனம்மாள், பேரூா் செயலா்கள் இலஞ்சிமுருகன், குற்றாலம் வேல்ராஜ், கீழப்பாவூா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.