தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வாா்டு திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வாா்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வாா்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு நாள்தோறும் 15 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. மாவட்டம் முழுவதிலுமிருந்து பிரசவத்துக்காக இங்கு வருவதால், மகப்பேறு முன்கவனிப்பு படுக்கைகள் தட்டுப்பாடு நிலவியது. அதை சரிசெய்யும் வகையில் 20 படுக்கைகள் உள்ள வாா்டு தயாராகியுள்ளது.

மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் பிரேமலதா தலைமை வகித்து, வாா்டை திறந்துவைத்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் முன்னிலை வகித்தாா்.

மகப்பேறு துறைத் தலைவா் புனிதவதி, தமிழருவி, சைனி கிருத்திகா, விஜயகுமாா், செவிலியக் கண்காணிப்பாளா்கள் பத்மாவதி, ஜெகதா, அனைத்து செவிலியா், பணியாளா்கள் பங்கேற்றனா். உறைவிட மருத்துவா் எஸ்.எஸ். ராஜேஷ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT