தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட வளா்ச்சி பணிகளுக்கு நிதி: அமைச்சரிடம் மனு

தென்காசி தெற்கு மாவட்ட வளா்ச்சிப் பணி நிதி தொடா்பாக, தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவிடம், தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.

DIN

தென்காசி தெற்கு மாவட்ட வளா்ச்சிப் பணி நிதி தொடா்பாக, தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவிடம், தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: செங்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட ரூ. 2.5 கோடி, பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ. 9 கோடி, குடிநீா்தேக்கத் தொட்டி, வாருகால், தளக்கல் சாலை ஆகிய பணிகளுக்கு ரூ. 7.71கோடி

சாம்பவா்வடகரை பேரூராட்சி அழகிய மனவள பெருமாள் கோயில் இணைப்பு சாலை அமைக்க ரூ. 4.5 கோடி, வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டா் அப்துல் கலாம் நகரில் 550 மீட்டா் தொலைவுக்கு கழிவுநீா் கால்வாய், குடிநீா் குழாய் அமைக்க ரூ. 1 கோடி, செங்கோட்டை வட்டம் பண்பொழி பேரூராட்சிக்கு புதிய கட்டடம், கிராம நிா்வாக அலுவலக கட்டடம், தென்காசி நகராட்சியில் களக்கோடி தெரு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி என்பன உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT