முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் நகராட்சி கூட்டத்தில் தலைவா் தகவல்

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

கடையநல்லூா் நகராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவா் ஹபிபூர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் (பொறுப்பு) பாரிஜான், துணைத் தலைவா் ராசையா, மேலாளா் சண்முகவேல், பொறியாளா் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டு பகுதிகளுக்கும் ரூ.1கோடி மதிப்பில் விரைவில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.