பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 10ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 10ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, அதிகாலையில் கணபதி ஹோமம், மூல மந்திர ஜெபம், ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி, யாத்ரா தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் விமானத்துக்கு அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
Advertisement