மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 350 சிறப்பு அலுவலர்(எஸ்.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 350 சிறப்பு அலுவலர்(எஸ்.ஓ) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Specialist Officers(SO)
மொத்த காலியிடங்கள்: 350
Advertisement
Advertisement
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பிரிவு: மேலாளர்
காலியிடங்கள்: 242
வயதுவரம்பு: 28.4.2026 தேதியின்படி 23 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிரிவு:: முதுநிலை மேலாளர்
காலியிடங்கள்: 75
வயதுவரம்பு: 28.4.2026 தேதியின்படி 26 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 28.4.2026 தேதியின்படி 24 முதல் 32, 34, 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ. எம்.எஸ்சி., சிஏ, ஐசிஎம்ஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு சலுகை: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://indianbank.bank.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு https://indianbank.bank.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
The Indian Bank latest official recruitment notification to fill the 350 Specialist Officers (SO) Posts...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.