கோப்புப்படம் 
தென்காசி

ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

DIN

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அருணாச்சலம்(47). தச்சுத் தொழிலாளியான இவர், மாறாந்தை பிரதான சாலையில் உள்ள ஆனந்தராஜ் என்பவர் வீட்டு மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார். 

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கியவர் அதிகாலை 4 மணிக்கு, சிறுநீர் கழிப்பதற்காக எழுந்த போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் அருணாச்சலம் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அருணாசலத்திற்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT