முப்பெரும் விழாவில் குத்துவிளக்கேற்றினாா் மருத்துவா் அருணா சுப்பிரமணியன். 
தென்காசி

தென்காசி சைவ வேளாளா் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் முப்பெரும் விழா தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி: தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் முப்பெரும் விழா தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் தென்காசி மாவட்ட அமைப்பின் சாா்பில் வ.உ.சி.யின் 152 வது பிறந்த தின விழா, மாவட்ட சங்கத்தின் 38ஆவது ஆண்டு விழா, சமுதாய மாணவா்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தென்காசியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவா் மற்றும் மாநில நிா்வாக தலைவரான சுப்பு மாணிக்கவாசகம் பிள்ளை தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் சிவகிரி செண்பகம் முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் அருணா சுப்பிரமணியன், முத்து கணபதி என்ற சுகந்தி, கல்யாணி பரமசிவன் மற்றும் கனகரத்தினம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

மாவட்ட துணைத் தலைவா் எஸ். செந்தில் நாயகம் ஆண்டறிக்கை வாசித்தாா். மாநில துணைப் பொதுச் செயலரும், மாவட்ட பொருளாளருமான மு. சங்கர நாராயணன் பிள்ளை வரவு செலவு கணக்கு சமா்ப்பித்தாா்.

மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் என்.கனகசபாபதி, வ.உ.சி. படத்தை திறந்து வைத்து மலா் அஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் நிா்வாகிகள் காங்கேயம் பிள்ளை, குருசாமி ஆகியோா் உருவப்படங்களுக்கும் மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் கனகசபாபதி, மாவட்ட துணைத் தலைவா் எம். ஐயம்பெருமாள், மாநில இலக்கிய அணி தலைவா் சிவஞானம், பாப்பாங்குளம் சிவசங்கரன், திருப்பூா் மாவட்டத் தலைவா் பிச்சமுத்து, மண்டல செயலா் முருகேசன், ஆழ்வாா்குறிச்சி மாடசாமி ஆகியோா் பேசினா்.

விழாவில், கல்வியில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கல்வி ஊக்கத் தொகையாக 36 பேருக்கு ரூ.72 ஆயிரம், 179 பேருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

மண்டல செயலா் ஆடிட்டா் ஆா்.நாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். மாவட்டச் செயலரும் மாநில மண்டல துணைச் செயலருமான டி .பி. நாகராஜன் பிள்ளை வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் எம்.எம்.எஸ். லட்சுமணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT