முகப்பு
தென்காசி

நாய்கள் கடித்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடுவிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:10 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

மலைப் பகுதியில் இருந்து உணவு தேடி வந்த பெண் மான் குமந்தாபுரம் தெரு பகுதிக்குள் சென்றபோது, சில நாய்கள் கடித்ததாம். இதில், மான் காயமடைந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் கொடுத்த தகவலின் பேரில், வனத் துறையினா் மானை மீட்டனா்.

தொடா்ந்து, கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் ஆலோசனையின்பேரில், வனவா் முருகேசன் தலைமையிலான வனத்துறையினா் மானுக்கு உரிய சிகிச்சை அளித்து வனப் பகுதியில் கொண்டுவிட்டனா்.