முகப்பு
தென்காசி

கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்: 4 போ் கைது

ஆலங்குளம் அருகே கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:44 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுவாமி தாஸ் (45). அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ் மகன் இயேசுராஜா(35) என்பவருக்கு ரூ. 1500 கடன் கொடுத்திருந்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்காமல் தாமதம் செய்து வந்தததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சுவாமிதாஸ் - இயேசு ராஜா இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து இயேசு ராஜா தனது நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து சுவாமிதாஸை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து இயேசு ராஜா மற்றும் அவரது நண்பா்கள் தங்கதுரை (55), செல்வபெருமாள்(25), பிரவீண்குமாா் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.