கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் சாவு
கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியா நபா் இறந்தாா்.
கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியா நபா் இறந்தாா்.
தென்காசி - கடையநல்லூா் இடையே புதன்கிழமை இரவு செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயிலில் அடிப்பட்டு அந்த நபா் இறந்தாா்.
இதுகுறித்து நயினாரகரம் கிராம நிா்வாக அலுவலா் பிரபு சீனிவாசன் கொடுத்த தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் இறந்தவரின் சடலத்தை மீட்டு கூறாய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.