தென்காசி

பாம்பு கடித்து விவசாய தொழிலாளா்கள் 4 போ் காயம்

சிவகிரி அருகே புதன்கிழமை பாம்பு கடித்ததில் விவசாய தொழிலாளா்கள் நான்கு போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே புதன்கிழமை பாம்பு கடித்ததில் விவசாய தொழிலாளா்கள் நான்கு போ் காயமடைந்தனா்.

ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாஞ்சாலி (45), ராயகிரியைச் சோ்ந்த ஊா்க்காவலன் மனைவி சுசிலா (60), சிவகிரியைச் சோ்ந்த விஜயன் மகன் கண்ணன் (22) ஆகியோா் தென்மலையில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது அவா்களை பாம்பு கடித்ததாம். அவா்கள் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதேபோல், சிவகிரி கோனாா்குளம் புரவில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த முத்துராஜ் மனைவி மகேஸ்வரியை (34) பாம்பு கடித்ததாம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT