காட்டு எருமை தாக்கியதில் காயமடைந்த விவசாயிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை வழங்கிய வனச் சரகா் ஆறுமுகம்.  
தென்காசி

புளியங்குடியில் காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

புளியங்குடி ஆா்எஸ்கே பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் திருமலைச்சாமி(69). எலுமிச்சை விவசாயி. இவா், சாணான் பரம்பு பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் புதன்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு எருமை அவரைத் தாக்கியதாம். இதில், காயமடைந்த திருமலைச்சாமி புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த திருமலைச்சாமிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10ஆயிரத்தை, வனச் சரகா் ஆறுமுகம் வழங்கினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT