கோயிலின் வடபுறம் பூச்சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டப்பட்ட கேந்திப் பூக்கள்.  
தென்காசி

ஒரு கிலோ ரூ. 10க்கு விற்பனை: கேந்திப் பூக்களை சாலையில் கொட்டிய வியாபாரிகள்

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

சங்கரன்கோவில், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லி, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அவை சங்கரன்கோவில் பூச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த சில நாள்களாக கேந்திப் பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு விலையில்லை. இதனால் அவற்றின் விலையும் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை கேந்திப் பூ விலை, கிலோ ரூ. 10-க்கு விற்பனையானது. உரிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஒரு டன் கேந்திப் பூக்களை சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டினா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT