மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு
மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழா மேலநீலிதநல்லூா் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலா் பெரியதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
இதில் சங்கரன்கோவில் நகரச் செயலா் மு.பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி துணைத் தலைவா் முத்தரசு, மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுத் தலைவா் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு தலைவா் அரசு ஒப்பந்ததாரா் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் வெள்ளைத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வீமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.