தென்காசியில் காவல்துறை அணிவகுப்பு
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்
நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்புக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் , 6 காவல் ஆய்வாளா்கள், 8 சாா்பு ஆய்வாளா்கள், 40 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினா், 103 காவலா்கள் கலந்துகொண்டனா்.
தென்காசி காசி விஸ்வநாதா் ஆலயம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு சுவாமி சந்நிதி பஜாா், மவுண்ட் ரோடு, கீழப்புலியூா் , மேலப்புலியூா் , கொடிமரம், பொன்னிப்பாறை தெரு, ஒப்பனை விநாயகா் கோயில், தங்கப்பாண்டியன் சிக்னல், யானை பாலம் சிக்னல் வழியாக தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.