முகப்பு
திருநெல்வேலி

மகளிர் கல்லூரியில் இளைஞர் ஈர்ப்பு முகாம்

உலக கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு  பேட்டை

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:07 PM
பகிர்:

உலக கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு  பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

 முகாமில் இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

 முகாமுக்கு பாளை. புனித யோவான் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் கிங்ஸ்லி ஏர்னெட்ஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜே.டி. விஜிலா முன்னிலை வகித்தார்.

 கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் டார்லிங் செல்வி பேசினார். கல்லூரியின் வணிகவியல் துறை இணை பேராசிரியர்கள் ரூபவதி பால், சுனிதா, எழில் ஜாஸ்மின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் ம. ஸ்டான்லி வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தி. சிவராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.