ஆலங்குளத்தில்,நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு நகர தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் தலைமை வகித்தார்.நகர செயலர் எஸ்.குணசேகரன்,வட்டார செயலர் தர்மராஜ்,9 வது வார்டு தலைவர் ஜோசப்,எஸ்.செல்வக்கணி,13 வது வார்டு தலைவர் செல்லமணி, வெள்ளையா, பி.சாமுவேல் முன்னிலை வகித்தனர்.எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி கலந்து கொண்டு,தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்திய உணவு கழக உறுப்பினர் அ.வைகுண்டராஜா,ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் முத்தையா,டி.சி.டி.யூ மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், தாமஸ்ஜெபவீரன்,செல்வராஜ்,சண்முகையா,அர்ஜூனன்,கோயில்பிள்ளை,ராஜன்,லெட்சுமணன்,அய்யாச்சாமி,ஏ.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.