புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம்
இக்கோவிலின் தைத்தேரோட்ட திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி திருவீதி உலாவும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் செயல்அலுவலர்(பொ) ராமராஜூ,நகர்மன்றத் தலைவர்
புளியங்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
இக்கோவிலின் தைத்தேரோட்ட திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி திருவீதி உலாவும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் செயல்அலுவலர்(பொ) ராமராஜூ,நகர்மன்றத் தலைவர் சங்கரபாண்டியன்,சிவகிரி வட்டாட்சியர் புகாரி,பி.எஸ்.சங்கரநாராயணன்,சித்துராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.