திருநெல்வேலி

தாழையூத்தில் விபத்து: மருந்து விற்பனை பிரதிநிதி சாவு

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (30). மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை தாழையூத்து பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளும், காரும் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த மாரியப்பனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT