திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் தமிழ்ப்பேரவை தொடக்க விழா

DIN

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் நிலா முற்றம் மாணவர் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு,  தமிழ்த் துறைத் தலைவர் சு. சிவசங்கர் தலைமை வகித்தார்.  மாணவிகள் சந்தியா, கார்த்திகா கலைவாணி ஆகியோர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர்.  மாணவர்கள் தயார் செய்த  நிலாமுற்றம் இதழை கல்லூரி முதல்வர் சி.அழகப்பன் வெளியிட்டார். அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய அம்பாசமுத்திரம் ஒருங்கிணைப்பாளர் ச.பூங்குன்றன் இதழைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து இன்றைய இளைஞர்கள் செல்லும் பாதை வெல்லும் பாதையா வீழும் பாதையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பணி நிறைவு பேராசிரியர் சு.சக்திவேலு நடுவராகப் பணியாற்றினார்.  மாணவிகள் சுபித்ரா, சிந்துஜா, பார்வதி,  சங்கரேஸ்வரி ஆகியோர் வாதிட்டனர்.  மாணவி ரேவதி வரவேற்றார்.  மாணவி நேசபிரின்சி நன்றி கூறினார்.
மாணவர் குணசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.  தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் விஜயா,  பாக்கியமுத்து,  ஸ்ரீஜெயந்தி,  கண்ணகி,  கவிதா,  ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை தமிழ்த் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT