முகப்பு
உலகம்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 50 பேர் பலியானது குறித்து...

Updated On : 12 மார்ச், 2026 at 11:20 AM
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு (கோப்புப் படம்)
பகிர்:

எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 50 பேர் பலியானதாகவும், 125 பேர் மாயமாகியுள்ளதாகவும் வியாழக்கிழமை (மார்ச் 12) உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடந்து, 3 மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமானவர்களைத் தேடும் பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Around 50 people have been reported killed in a landslide in Ethiopia.

முழு கட்டுரையைப் படிக்க →