திருநெல்வேலி

களக்காடு அருகே தகராறு: 8 பேருக்கு கத்திக் குத்து

DIN

களக்காடு அருகே இரு தரப்பினரிடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் 8 பேர் காயமடைந்தனர்.
களக்காடு அருகே நடுவக்குளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு கழிவுநீர்த் தொட்டி கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவரை தாக்கியும், கத்தியால் குத்தினராம்.
இதில் காயமடைந்த 8 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து களக்காடு போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT