திருநெல்வேலி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேமுதிக கட்சியின் அமைப்புத் தேர்தல் இம்மாதம் 3 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்தலில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டச் செயலராக அ. முகம்மதுஅலி, அவைத் தலைவராக எஸ். முருகன்சுப்பையா, பொருளாளராக எஸ். ஜெயசந்திரன், துணைச் செயலர்களாக எம். பழனிக்குமார், கே.ஏ. பரமசிவன், ஏ. முருகையா, எஸ். கன்னிகா, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக எஸ். வேல்பாண்டி,
பி. ஆனந்தமணி, பொதுக்குழு உறுப்பினர்களாக டி. பாலகிருஷ்ணன், எஸ். சரவணன், பி. குமார், கே. சுப்பிரமணியன், எம். முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.