பாளையங்கோட்டையில் ஷிபா மருந்தகத்தின் 2ஆவது ஆண்டு விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, ஷிபா மருத்துவமனையின் நிர்வாகஇயக்குநர் எம்.கே.எம். முஹம்மதுஷாபி தலைமை வகித்தார். முகாமில், கே.டி.சி. நகர், ரஹ்மத்நகர், வி.எம். சத்திரம், மகாராஜநகர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, புற்றுநோய் மருத்துவம் குறித்து மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
இதையொட்டி இம்மாதம் 30 ஆம் தேதி வரை இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படும் மருத்துவ இயக்குநர் முஹம்மதுஅரபாத் தெரிவித்தார்.