திருநெல்வேலி

போலீஸாருடன் வாக்குவாதம்: 5 மாணவர்கள் கைது

DIN

திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த விழா கொண்டாட்டத்தில் சனிக்கிழமை போலீஸாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ஆதிதிராவிட நல விடுதியில் மாணவர்கள் தங்கி பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள் சனிக்கிழமை மாலை விடுதி வளாகத்திற்கு வெளியே அம்பேத்கரின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனராம்.
இதில், தப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வளாகத்திற்குள் கொண்டாடுமாறு தெரிவித்தனராம். அப்போது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபட்டனராம். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT