பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் தேசிய கலந்தாய்வு நடைபெற்றது.
கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் "வரலாற்றுப் பின்னணியில் முன்வைக்கப்பட்ட இலக்கியம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், கல்லூரிச் செயலர் சாம்சன் பால்ராஜ், முதல்வர் உஷா காட்வின், துணை முதல்வர் ஜெபமலர் வின்சஸ் மணிமாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆங்கிலத் துறைத் தலைவர் ஜெஸிகா செல்வின் வரவேற்றார். கேரள பல்கலைக்கழக தொலைதூர கல்வி இணைப் பேராசிரியர் சி.ஏ.லால், தூய சவேரியார் கல்லூரி ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் ஜோக்கிம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.