திருநெல்வேலி

நரசிங்கநல்லூரில் திருவாசகம் முற்றோதுதல்

DIN

திருநெல்வேலி பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூரில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி  நடைபெற்றது.
நரசிங்கநல்லூரில் உள்ள அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், துர்கா அபிராமி திருவாசக முற்றோதுதல் குழு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு 36 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. உலக நன்மைக்காகவும், மழைவளம் பெருக வேண்டியும் வழிபாடு நடைபெற்றது. குழுவின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் மூ.கணேசன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் திருவாகச முற்றோதுதல் செய்யப்பட்டது. ஆனந்தக்கூத்தன் அறக்கட்டளையினர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, தனம், மீனா, சுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT