திருநெல்வேலி

காவல் நண்பர்களுக்கு சிறப்பு பயிற்சி

DIN

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் காவல் நண்பர்களுக்கு ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டது.
போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி காவல் நண்பர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. போக்குவரத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்துதல் குறித்து காவல்துறை பயிற்றுநர்கள் சங்கர், ஜெயா ஆகியோர் பயிற்சி அளித்தனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாநகர காவல் துணை ஆணையர்
பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்றுப் பேசினார். போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் சாதுசிதம்பரம், உதவி -ஆய்வாளர் செல்லத்துரை, காவலர் ஜெய்லானி, கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கலீல்அஹம்மது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காவல் நண்பர்கள் குழு அலுவலர் பேராசிரியர் ஏ. அப்துல்அஜீஸ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜமால் முகம்மது நன்றி கூறினார். மாணவர் சம்சுதீன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT