திருநெல்வேலி

வலுதூக்கும் போட்டியில் தங்கம்: மாணவருக்குப் பாராட்டு

DIN

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அகில இந்திய அளவில் ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும் போட்டி மகாராஷ்டிர மாநிலம், வாசிம் நகரில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 68 கிலோ எடைப்பிரிவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் துறை ஆராய்ச்சி மாணவர் ப.ராஜ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
அவரை, பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், பதிவாளர் (பொ) பி.கோவிந்தராஜு, உடற்கல்வியியல் துறை இயக்குநர் ச.சேது, வணிகவியல் துறைத் தலைவர் பி.ரேவதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT