திருநெல்வேலி

மருதகுளம் பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் வளாகத்தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் சென்னை மையங் ஷின் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் ஸ்டான்லி, ஆல்வின், எல்காம்போ எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் ஜாவித் அகமது, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இரு நாள்கள் வளாகத் தேர்வை நடத்தினர்.
இதில்,  கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளின் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வின் முடிவில் 20 மாணவர்-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஷாநவாஸ் ஆலோசனையின் பேரில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மதுரபீக், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT