திருநெல்வேலி

பொது இடங்களில் இலவச வைபை வசதி:  திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை

DIN

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைபை சேவை அளிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவன பொதுமேலாளர் ப. முருகானந்தத்தை சந்தித்து டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. (திமுக) அளித்த மனுவில்: பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்,  பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம்,  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை போன்ற பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவசமாக இணையதள இணைப்பை பெறும் வைபை (W​I​F​I) வசதியை ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT