சுத்தமல்லி குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு
சுத்தமல்லியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
சுத்தமல்லியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது சுத்தமல்லி குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 180 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வசித்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த காலங்களில் மாநகர மேயர் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாததால், பாம்பு கடித்து சிலர் இறந்திருக்கிறார்கள். எனவே ஆட்சியர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.