திருநெல்வேலி

பாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

DIN

திருநெல்வேலியில் அந்த மக்களவைத் தொகுதிக்கான பாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, மாநில இளைஞரணிச் செயலர் வேல்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர்கள் என்.ஆவுராஜா, எம்.அய்யர், பொதுச்செயலர்கள் ஐ.சிவன்வீரபூபதி, எல்.டி.தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது, இந்தியா முழுவதும் பாஜக மீது இளைஞர்களின் நம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் விரைவான செயல்பாடுகளை மக்கள் பாராட்டி வருகிறார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி மிகுந்தவர்களாக பாஜக தொண்டர்கள் உள்ளனர்.  அவர்கள் கட்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றார் அவர்.
மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் பேசுகையில்,  பாஜக இளைஞரணியில் பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். கிராமம்தோறும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றார்.
கூட்டத்தில், பொருளாளர் கே.விஜய் வரவேற்றார். கோட்டப் பொறுப்பாளர் எம்.தர்மராஜ், மாவட்டத் தலைவர் ஏ.தயாசங்கர், இளைஞரணி மாநில பொதுச்செயலர் எம். மாரிசக்கரவர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT