திருநெல்வேலி

மாவட்ட கிரிக்கெட்:  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

DIN

சங்கர்நகரில் மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 2017-18 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் கிரிக்கெட் லீக் போட்டிகடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக இந்தியா சிமென்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் லைட்னிங் அணி முதலிடமும், இந்தியா சிமென்ட்ஸ் அணி 2 ஆவது இடமும்,  பி பிரிவில் ஏபிசிடி அணி முதலிடமும்,  பவர் ஸ்டார் அணி 2 ஆவது இடமும் பெற்றனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவுக்கு அமைப்பின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை அதிகாரி விஸ்வநாதன், போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
சிறந்த வீரர்களுக்கான பரிசை கௌதம், அஸ்லாம் சேர்கான், அரவிந்த், பொன். லட்சுமணன், அருண்குமார், அன்பரசன் ஆகியோர் பெற்றனர். 
அமைப்பின் செயலர் ராம்குமார் வரவேற்றார்.  நடராஜ் சங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT