திருநெல்வேலி

பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

திருநெல்வேலி அருகே கடைக்கு சென்ற தனியார் பள்ளி நிர்வாகி மனைவியிடம், 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவர், மேலப்பாளையத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). இவர், வீட்டு அருகே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நடந்து சென்றாராம். அப்போது, அவ்வழியாக தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT