திருநெல்வேலி

பைக் விபத்தில் காயமடைந்தவர் சாவு 

DIN

புளியங்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.
சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் தர்மர் (65). இவரது மகன் பாலமுருகன் (27). இருவரும் சொக்கம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.  
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இருவரும் பைக்கில் வேலைக்குச் சென்றனராம். திரிகூடபுரம் அருகே கருப்பாநதி சாலையில் செல்லும் போது, குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மர், அங்கு உயிரிழந்தார். பாலமுருகன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT