திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் சாவு

DIN

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவர், வியாழக்கிழமை ஒரு பயணியை ஏற்றிக் கொண்டு ஜோதிபுரத்திற்குச் சென்றாராம். அங்கு இறக்கிவிட்ட பின்பு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். டக்கரம்மாள்புரம் அருகே வந்தபோது ஆட்டோவும், அந்த வழியாக வந்த காரும் மோதியதாகக் கூறப்படுகிறது. 
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT