திருநெல்வேலி

விநாயகர் சிலை ஊர்வலம்: நெல்லை மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு

DIN


விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: செங்கோட்டையில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை. அமைதி நிலவுகிறது. அங்கு, மாவட்ட காவல் துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இரு தரப்பினரும் பிரச்னைகளை புரிந்துகொண்டுள்ளனர். எனவே, இனி பிரச்னைக்கு இடமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் கடையநல்லூர், திருநெல்வேலி மாநகரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்னையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT