திருநெல்வேலி

செங்கோட்டைக்குள் நுழைய அனுமதி மறுப்பு: தமுமுக பொதுச் செயலர் ஆட்சியரிடம் புகார்

DIN

செங்கோட்டைக்குள் நுழைய தமுமுக மாநில பொதுச்செயலர் ஹைதர் அலிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து புகார் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து தென்காசி மற்றும் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமுமுக மாநில பொதுச்செயலர் ஹைதர் அலி, வியாழக்கிழமை செங்கோட்டைக்கு செல்ல முயன்றார். அப்போது தடை உத்தரவு அமலில் இருப்பதைக் காட்டி அவரை செங்கோட்டைக்குள் நுழைய காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. 
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட ஹைதர் அலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் புகார் அளித்தார். பின்னர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துவிட்டு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT