திருநெல்வேலி

கடையம் அருகே நாயை வெட்டிக் கொன்ற இளைஞர் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரத்தில் மதுபோதையில் நாயை வெட்டிக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பால்நாடார் மகன் ராமச்சந்திரன் (33). இவர் கடையத்தில் எலுமிச்சை தரகு மண்டி நடத்தி வருகிறார். ராமச்சந்திரனின் உறவினர் கோதண்டராமபுரம் கீழத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராஜ் (23), ராமச்சந்திரனை தேடி அவரது வீட்டிற்கு வந்தாராம். அப்போது அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த நாய் ராஜை பார்த்துக் குரைத்ததாம். மதுபோதையில் இருந்த ராஜ், அரிவாளால் நாயை வெட்டியதில், அது உயிரிழந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் கடையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து ராஜை கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT