திருநெல்வேலி

ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

DIN

ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 9ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வரகுணபாண்டீஸ்வரர் சுவாமிக்கும், நித்திய கல்யாணி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. 
பின்னர் சுவாமியும்- அம்மனும் தனித்தனித் தேர்களில் எழுந்தருளினர்.  தொடர்ந்து, சுவாமிக்கும் அம்மனுக்கும் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் வடம்பிடித்து இழுத்தனர். இரு தேர்களும் ரதவீதியைச் சுற்றி பிற்பகல் 2 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10ஆம் திருநாளான வியாழக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனர். தெப்ப உற்சவ ஏற்பாடுகளை ராதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மதன், குடும்பத்தினரும், திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர், ஊர்மக்களும் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT