திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகத்தில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்-மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியை காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடக்கிவைத்தார். 6, 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய சுதந்திரப் போராட்டம்' என்ற தலைப்பிலும், 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எனது பார்வையில் சுதந்திர இந்தியா' என்ற தலைப்பிலும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்தியா 2020' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச்சேர்ந்த 130 பேர் போட்டியில் பங்கேற்றனர். இதில், சிறப்பிடம் பெறுவோருக்கு, அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT