திருநெல்வேலி

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் கொக்கிரகுளத்திலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, அவர்கள் சாலை ஓரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில பொதுச் செயலர் எஸ்.வானமாமலை தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜ், கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சுடலைகண்ணு, வழக்குரைஞர்கள் ராமேஸ்வரன்,  காமராஜ், முன்னாள் கவுன்சிலர் உமாபதி சிவன்,  மாவட்ட பொதுச்செயலர்கள் சொக்கலிங்ககுமார், மனோகரன், துரை செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பேட்டை சுப்பிரமணியன், உதயகுமார், வெள்ளைப்பாண்டியன், சிவன் பெருமாள், மாவட்டச் செயலர் பரணி இசக்கி, குறிச்சி கிருஷ்ணன், மணி, மண்டலத் தலைவர்கள் ஐயப்பன், தனசிங் பாண்டியன், பாலாஜி, சுல்தான், தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் காவேரி,  மீனவர் அணி செயலர் ஆல்பர்ட், இளைஞர் காங்கிரஸ்  தலைவர் ராஜீவ் காந்தி, தருவை காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT