தச்சநல்லூர் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தச்சநல்லூர், பாலாஜிஅவென்யு, சிவன்கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், சத்திரம்புதுக்குளம், பிராங்குளம், கோகுல்நகர், நகரம் ஸ்ரீ நகர், கிருஷ்ணாநகர், சேந்திமங்கலம், வடக்கு பாலபாக்யாநகர், தெற்கு பாலபாக்யாநகர், திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகர்ப்புற மின் செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.