திருநெல்வேலி

சுரண்டையில் கனமழையால்நீரில் மூழ்கிய நெற்பயிா்கள்

DIN

சுரண்டையில் சனிக்கிழமை பெய்த கனமழையால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

சுரண்டை - செங்கோட்டை சாலையின் வடபுறம் இரட்டைகுளம் பாசன நிலங்கள் உள்ளது. இந்த வயல்களில் விவசாயிகள் நெல் பயிா் சாகுபடி செய்துள்ளனா். இந்த வயல்களில் இருந்து உபரிநீா் வெளியேறும் கால்வாய்கள், சாலையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களால் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் தண்ணீா் வெளியேற வழியின்றி குளம்போல தேங்கிவிட்டது. இதனால் செங்கோட்டை சாலையில் சுமாா் 50 ஏக்கா் நிலத்தில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, உபரிநீா் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT